3 கிராம் 33 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று -13- விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2013ம் ஆண்டு கறுவாத்தோட்டம் பகுதியில் 3 கிராம் 33 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
இதனையடுத்து, இவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த வழக்கு விசாரணைகளின் படி, இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Post a Comment