24 மணி நேரத்தில் 36.000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்தில் தஞ்சம்
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 36 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மர் நாட்டில் இருந்து வெளியேறி வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
தற்காலிக முகாம்களில் எல்லாம் அகதிகள் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில் நேற்று வங்காளதேசத்துக்குள் நுழைந்த அகதிகள் அனைவரும் தங்குவதற்கு பாதுகாப்பான இடமின்றி, எல்லையோர கிராமப்புறங்களில் உள்ள வயல்காடுகளிலும், வெட்டவெளிகளிலும் தங்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
Post a Comment