Header Ads



இலங்கையில் 22 சதவீத முஸ்­லிம்­கள் வறு­மையானவர்கள், நோய்களால் பாதிக்­கப்­ப­டு­வர்­ தொகை மும்­ம­டங்­கு

-Ash Sheikh SHM Faleel-

இலங்கை சமூக நிலை­வ­ரத்தை குறுக்கு வெட்­டு­மு­க­மாக நோக்கும்போது அதா­வது, பகுப்­பாய்வு செய்யும் போது இலங்கை தஃவா மற்றும் சமூகக் களங்­களில் பணி­பு­ரிவோர் முதன்­மைப்­படுத்தி நோக்க வேண்­டிய பல அம்­சங்கள் உள்ளன.  

01. முஸ்லிம் சமூ­கத்­துக்குள் நாஸ்­திகம், சட­வாதம், நவீன நூற்­றாண்­டுக்கு இஸ்லாம் பொருத்­தமா என்ற சந்­தேகம் போன்­றன வலுப்­பெற்று வரு­கி­ன்றன. 

02.ஷியா, காதி­யானி, பெண்­ணி­லை­வாதம், பின் நவீ­னத்­துவம் என்­பன தீவி­ர­மாக ஊடு­ருவி வரு­கின்­றன.

03. தனித் தனி­யா­கவும் குடும்­பங்­க­ளா­கவும் சிலர் மதம் மாறிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இஸ்­லாத்தைப் பற்றி விமர்­சன ரீதி­யாக எழு­தப்­படும் சிங்­கள மொழி­யி­லான நூல்­களும் வெப்­த­ளங்­களும் சிங்­கள மொழி மூலம் கற்­பதும் இதற்­கான பிர­தான கார­ணங்­க­ளாகும். 

04. சர்­வ­தேச ரீதி­யா­கவும் உள்­நாட்­டிலும் செயற்­படும் உள­வுஸ்­தா­ப­னங்­களும் நிறு­வ­னங்­களும் முஸ்­லிம்­களைப் பின் தொடர்ந்த வண்ணம் உள்­ளன. முஸ்­லிம்கள் பற்­றிய தப்­ப­பிப்­பி­ரா­யங்­களை உரு­வாக்­கு­வ­திலும் அவர்­க­ளுக்கு மத்­தியில் பிள­வு­களை தோற்­று­விப்­ப­திலும் அவற்றின் பங்கு அதிகம்.

05. முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடை­யி­லான உறவு மிக­வுமே பல­வீ­ன­மான கட்­டத்தை அடைந்து விட்­டது.

06. ஒப்­பீட்டு ரீதியில் இலங்கை முஸ்­லிம்கள் கல்வித் துறையில் பின்­தங்­கிய நிலையில் உள்­ளனர். (புள்ளி விப­ரங்கள் உள்­ளன. 

07. இலங்கை முஸ்­லிம்­களில் 22% ஆன­வர்கள் வறு­மைக்­கோட்­டுக்குக் கீழ் வாழு­கி­றார்கள். 50,000  குடும்­பங்கள் அடிப்­படை உணவுத் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடி­யாத ‘பகீர்கள்’ எனும் நாமத்­துடன் வாழு­கி­றார்கள். 

08. இலங்­கையில் தொற்றா நோய்கள் (Non Communicable Deceise) களால் பாதிக்­கப்­ப­டு­வர்­களில் முஸ்­லிம்­களின் தொகை மும்­ம­டங்­காகும்.

09. போதை­வஸ்துப் பாவனை சமூக வலைத் தளங்­க­ளுக்கு அடி­மை­யாதல், குடும்ப அமைப்பின் சிதைவு, பிற சமூ­கங்­க­ளு­ட­னான உறவு விரிசல் என ஏகப்­பட்ட பிரச்­சி­னைகள் நாளுக்கு நாள் அதி­க­ரித்த வண்­ணமே உள்­ளன.

10. இது தவிர சர்­வ­தேச ரீதி­யாக முஸ்லிம் சமூகம் சந்­திக்­குக்கும் துன்­பங்­களை வார்த்­தை­களால் வடித்து முடிக்க முடி­யாது.

மொத்­தத்தில்- மிகைப்­படக் கூறு­வ­தாக எவரும் நினைத்து விட­லா­காது.- ஒரு பின்­தங்­கிய, பல­வீ­ன­மான, நொந்­து­போன சமூ­க­மாக முஸ்லிம் சமூகம் உள்­ளது. இஸ்­லா­மிய பிர­சா­ரத்தில் சம்­பந்­தப்­ப­டு­வோரும் பொறுப்­பான பத­வி­களில் அமர்ந்­தி­ருப்­போரும் சமூக சீர்­தி­ருத்தப் பணி­களில் ஈடு­வோரும் இவற்றை கருத்தில் எடுக்க வேண்டும். சில்­லறைத்தன­மான கருத்து வேறு­பா­டு­களில் தொடர்ந்தும் ஈடு­ப­டு­வது சமூ­கத்தை இன்னும் பல­வீ­னப்­ப­டுத்தும் என்­பதை மறக்கலாகாது பொறுப்­புக்­களை உரிய முறையில் நிறை­வேற்­றாத நிலையில் மறு­மையை நோக்கிச் செல்வோர் தமது நிலைப்­பா­டு­களை எப்­படி நியா­யப்­ப­டுத்­தலாம்? 

யாரோ கூறி­யது போல் அத்­த­ஹிய்­யாத்தில் விரலை அசைப்­பதா? இல்­லையா? என்ற பாரம்­ப­ரி­ய­மான கருத்து வேறு­பாட்டைப் பற்றி நாம் விவாத்­தித்து சரி பிழை கண்டு கொண்டிருக்கையில் உலகிலுள்ள பல கோடிப் பேர் ஸஹாதத்துக் கலிமாவையே அறியாத நிலையில் இருக்கிறார்கள்.(இவை எமது பணிவான அவதானங்களும் கருத்துக்களுமாகும்.குர்ஆன் கூறுவது போல் ”வதவாஸவ் பில்ஹக்” சத்தியத்தைக் கொண்டு பரஸ்பரம் உபதேசிப்பதற்கான ஒரு முயற்சி மட்டுமே.இவற்றில் தவறுகள் இருக்கலாம்.மனதைப் பிழிந்து கொண்டிருக்கும் கவலைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடனேயே இந்த ஆக்கம் எழுதப்படுகிறது.எவரது மனதையாவது பாதித்திருந்தால் அல்லாஹ்வுக்காக மன்னிப்பது நல்லதாகும்.எழுதும் நாம் எமது கடமைகளை எந்த அளவு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்ற அச்சமும் உள்ளது.அல்லாஹ்வே எம்மை மன்னிக்க வேண்டும்.) 

சுருக்கமாக பின்வரும் ஆலோசனைகளை முன்வைக்கமுடியும்  

01. அதி முக்கியமான பிரச்சினை களையும் சவால்களையும் மிகத் துல்லியமாக இனம் காண்போம். இதில் இயக்க, கட்சி முரண்பாடுகளை ஒரு பக்கத்தில் தூக்கி எறிவோம். அல்லாஹ் பார்க்கிறான் என்ற அச்சமும் பரந்த வாசிப்பும் தேடலும் பரந்த மனப்பாங்கும் இதற்குத் தேவை.

02. முஸ்லிம் சமூகத்திலுள்ள துறைசார்ந்த நிபுணர்கள் சமூகப் பணிகளுக்கான காத்திரமான மூலோபாயத் திட்டங்களை (Stretegic  Plane) வகுக்க வேண்டும். இப்படிச் செய்தால் எமது வளங்கள் திறமைகள், நேரகாலம் என்பன வீணடிக்கப்படமாட்டாது. இலக்கு தெளிவாகும். வேலைப்பகுப்பு நடக்கும் துறைசார்ந்தவர்கள் மாத்திரம் ஈடுபடுவார்கள். 

03.உள்ளங்களில் உள்ள பதவி மோகம், அகம்பாவம், அறிவீனம், பணஆசை, புகழாசை, போன்ற உள நோய்களிலிருந்து தூரமாக வேண்டும் என்ற ஆழமான விருப்பம் என்பன உருவாக்கப்பட வேண்டும். சமூக நலன்களுக்காக எமது தனிப்பட்ட நலன்களை குர்பான் கொடுப்போம். 

அல்லாஹ் எம் அனைவரையும் பரந்த மனப்பாங்குடன், அறிவுத் தெளிவுடன், அவனுக்காக என்று மட்டும் செயட்படுபவர்களது கூட்டத்தில் சேர்ப்பானாக! 

No comments

Powered by Blogger.