சவூதிக்கு தொழிலுக்கு சென்று, தகவல்கள் இல்லாத 10 பேரின் பெயர்ப்பட்டியல்
சவூதிக்கு தொழிலுக்குச் சென்ற 10பேர் தொடர்பில் எந்த தகவலும் இல்லையென்று தெரிவித்து அவர்களது குடும்பத்தினர் இலங்கை வெளி நாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இவர்கள் தொடர்பாக தேடிப்பார்க்க பொதுமக்களின் ஒத்துழைப்பை பணியகம் எதிர்பார்க்கின்றது.
குறிப்பாக கீழே பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பணியகத்தின் வெளிநாட்டு தொடர்பு பிரவின் 0114379329 என்ற இலக்கத்துக்கோ அல்லது பணியத்துக்கு எழுத்து மூலமாகவோ அறிவிக்குமாறு பணியகம் கேட்டுக்கொள்கின்றது.
இல.7 பீ, உகன அம்பாறையைச் சேர்ந்த கமனி சியலதா, பரகன்தெனிய, இபுல்கொடவைச் சேர்ந்த என்.இந்திராணி, லக்கல, பள்ளேகமவைச் சேர்ந்த கே. ஐ.முதுமெனிகா, டபிள்யூ. ஏ.பர்லி வீரசிங்க, 4ஆம் கட்டை, ராஜாங்கனையைச்சேர்ந்த அமிதா ஜயசிங்க, துனுசினான கீழ்ப்பிரிவு, பூண்டுலோயாவைச்சேர்ந்த பெரியசாமி முத்துமாரியம்மா, மற்றும் நொரகொல்ல வத்த, நிவித்திகலயைச்சேர்ந்த பீ.எல்.பத்மினி, மிஹிந்துபுர கந்தபொலவைச்சேர்ந்த எம்.ஏ. காதர் பஸீலா, தெஹியத்த கண்டியைச்சேர்ந்த பீ.கே.சுகத் மற்றும் முதலாம் குறிச்சி, கோமாரியைச்சேர்ந்த சீ.சந்திரசேகரம் சந்திரமலர் ஆகியோர் தொடர்பிலேயே தகவல்கள் கோரப்படுகின்றன.
(எம்.ஆர்.எம்.வஸீம்)
Post a Comment