Header Ads



கொழும்பில் NFGG யின், மக்கள் சந்திப்பு


நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கொழும்பு மக்களுடனான சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் 'மாற்றத்திற்கான புதிய பாதை NFGG' என்கின்ற கருவில் நேற்று நடைபெற்றது.

கொழும்பு தபால் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் ந.தே.மு இன் தவிசாளர் அப்துர் ரஹ்மான், செயலாளர் நஜா முகம்மத், பிரதித் தவிசாளர் சிராஜ் மஸ்ஹூர் ஆகியோர் உரையாற்றினார்கள். இந்த உரைகளின் போது விழுமிய அரசியலை நல்லாட்சிக்கான முன்னணி எவ்வாறு முன்னெடுத்துச் செல்கிறது? அதில் உள்ள சவால்கள் என்ன? இதில் பொதுமக்களிடம் எதிர்பார்க்கும் ஒத்துழைப்பு என்ன? என்பது போன்றவற்றிற்றான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் துறைசார் நிபுணர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வின் கடைசி அங்கமாக பொதுமக்களிடம் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இக்கேள்வி பதில் நிகழ்வில் பல்வேறு விமர்சனங்கள், கேள்விகள், ஆலோசனைகள் என்பன மக்களால் முன்வைக்கப்பட்டு, அதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களால் பதில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கக விடயமாகும்.


No comments

Powered by Blogger.