Header Ads



மக்கா பள்ளிவாசலில், அடுத்த ஆண்டு உலகின் மிகப்பெரிய குடை


மக்கா பெரிய பள்ளிவாசல் முற்றவெளிகளில் அடுத்த ஆண்டு உலகின் மிகப்பெரிய மடிக்கும் குடைகள் நிறுவப்படவிருப்பதாக ஹஜ் பாதுகாப்பு படைகளின் தளபதி குறிப்பிட்டுள்ளார். யாத்திரிகர்களை சூரிய ஒளி மற்றும் வெப்பத்தில் இருந்து பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்த குடைகள் 53x53 மீற்றர்கள் பகுதியை உள்ளடக்கப்படவுள்ளது. பெரிய பள்ளிவாசலின் பாதுகாப்புக்கு பொறுப்பான படைகளின் தளபதியான மேஜர் ஜெனரல் முஹமது அல் அஹ்மதி இதனை தெரிவித்துள்ளார்.

பெரிய பள்ளிவாசலுக்கு குளிரூட்டப்பட்டிருப்பதால் அங்கு வெப்பநிலை குறைவாக இருந்தபோதும் அதன் முற்றவெளிகளில் இந்த குடைகள் யாத்திரிகர்களுக்கு ஆறுதலை அளிக்கும் வகையில் அமையும்.

எனினும் மதீனா மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலில் இவ்வாறான சிறிய குடைகள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.