இளஞ்செழியனை கொலைசெய்ய திட்டமிடப்படவில்லை - பொலிஸ்மா அதிபர் பூஜித்
யாழ். நல்லூரில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகம் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று அல்ல என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
இந்த துப்பாக்கிச்சூடு நீதிபதியை இலக்கு வைத்ததா? இல்லையா? என்பதை விசாரணை செய்ய வேண்டும், ஆனால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இது திடீரென ஏற்பட்ட சம்பவமாகவே உள்ளது. திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பூரண விசாரணைகள் நடைபெறுகின்றன. இதனால் மேலதிகமாக என்னால் எதையும் கூறமுடியாது என்றும் குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்தில் நீதிபதி ஒரு கருத்தையும், பொதுமக்கள் ஒரு கருத்தையும் கூறுகின்றனர், நேரில் கண்ட சாட்சியாளர்கள் வேறு கருத்தை கூறுகின்றனர். ஆனால் இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆனால் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் திட்டமிடப்பட்டதல்ல என்றும், திடீரென ஏற்பட்ட ஒன்று என்றும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
Post a Comment