Header Ads



பெண் பொலிஸின் காதல் வலை, சிக்கினான் பலநாள் திருடன்

(எம்.எப்.எம்.பஸீர்)

பண்­டா­ர­கம – கல்­துடே பகு­தியில் வர்த்­தக நிலையம் ஒன்றில் இரு தட­வைகள் ஒரே பாணியில் திரு­டிய திரு­டனை காதல் வலை விரித்து பொலிஸார் கைது செய்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

 பெண் பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒருவர் ஊடாக தவ­றிய அழைப்­பாக  (missed Call) தொலை­பேசி அழைப்­பெ­டுத்து அதன் ஊடாக  காதல் வலை விரித்து குறித்த சந்­தேக நபரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

குறித்த வர்த்­தக நிலை­யத்தில் பணம் மற்றும் பொருட்கள் திரு­டப்­பட்­டமை தொடர்பில் பண்­டா­ர­கம பொலிஸ் நிலை­யத்தின் பொறுப்­ப­தி­காரி  ஆனந்த டி சில்வா,  நிர்­வாக பிரிவு பொறுப்­ப­தி­காரி மஹேந்ர பெரேரா  ஆகி­யோரின் ஆலோ­ச­னைக்கு அமைய ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளது. 

இந் நிலையில், விசா­ரணை செய்த பொலி­ஸா­ருக்கு திருட்டுப் போன வர்த்­தக நிலையம் முன்­பாக வீடொன்றில் சிறு வர்த்­தகம் ஒன்றை நடத்தி வந்த நபர் ஒருவர் திருட்டு  இடம்­பெற்ற தினத்­தி­லி­ருந்து காணாமல் போன­தாக  தகவல் கிடைத்­துள்­ளது. குறித்த நபர் சிறு வயதில் தனது தாயை மின்­சாரம் பாய்ச்சி கொலை செய்­தமை தொடர்பில் குற்றம் சாட்­டப்பட்­ட­வ­ராவார். 

இந் நிலையில் சந்­தேக நபர் தொடர்பில் பொலிஸார்  கவனம்  செலுத்­தினர். இதன் போது அந்த நபர் தங்­கி­யி­ருந்த வீட்டின் பகுதி பூட்­டப்­பட்­டி­ருந்த போதும் அதில் ஒரு தொலை­பேசி இலக்கம் எழு­தப்­பட்­டி­ருந்­தது. அந்தத் தொலை­பேசி இலக்கம் சந்­தேக நப­ரி­னு­டை­யது என்­பதை தெரிந்­து­கொன்ட பொலிஸ் பொறுப்­ப­தி­காரி ஆனந்த டி சில்வா,, அதனை ஒரு பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரிடம் கொடுத்து இரவில் அழைப்பை ஏற்­ப­டுத்தச் செய்­துள்ளார்.

அழைப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ள பொலிஸ் கான்ஸ்­ட­பி­ளான பெண், ''அண்ணா நீங்கள் யார்? உங்­க­ளிடம் இருந்து மிஸ்ட் கோல் ஒன்று   வந்­தி­ருந்­தது'' என கதையை ஆரம்­பித்­துள்ளார். அதற்கு சந்­தேக நபர் ''இல்லை தங்­கச்சி,  நான் அழைப்பை ஏற்­ப­டுத்­த­வில்லை. நீங்கள் யார் தங்­கச்சி'' எனக் கேட்­டுள்ளார்.

''நான் பொலன்­ன­றுவை அண்ணா. பாணந்­து­றையில் அறை எடுத்து  தங்கி இருக்­கின்றேன். அழைக்­க­வில்லை எனின் பர­வா­யில்லை.'' எனக் கூறி அழைப்பை துண்­டித்­துள்ளார்.

 மறு கணமே மீளவும் சந்­தேக நபர் அழைப்பை ஏற்­ப­டுத்தி,  ''எனக்கு உன்­னுடன் பேச பிடித்­தி­ருக்­கின்­றது. உன்னைப் பற்றி தெரிந்­து­கொள்­ள­லாமா?'' என கோரி­யுள்ளார்.

அதன்­படி திட்­டத்தின் பிர­காரம் பெண் பொலிஸ் கான்ஸ்­டபிள் சந்­தேக நப­ருடன் பேச ஆரம்­பித்­துள்ளார். தனது திரு­மண வாழ்க்கை தோல்­வி­ய­டைந்து விட்­ட­தா­கவும் தான் தொழில் செய்­து­கொண்டு பாண­ந்து­றையில் தங்கி இருப்­ப­தா­கவும்  தனி­மை­யாக இருப்­பது கொடு­மை­யாக உள்­ள­தா­கவும் பெண் பொலிஸ் கான்ஸ்­டபிள் கூறி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து,   ''உனக்­காக கெசட் ரெக்­கோர்டெர் ஒன்­றினை வாங்கிக் கொண்டு பாணந்­துறை வரு­கின்றேன் தங்­கமே'' என கூறி­யுள்ள  சந்­தேக நபர், தன்னை ஒரு பணக்­கா­ர­னாக காட்டிக் கொண்டு தான் ஜீப்பில் வரு­வ­தா­கவும் இரவு உண­வக ஹோட்டல் ஒன்­றுக்கு போய் இரு­வரும் சேர்ந்து உண்­ணலாம் எனவும் ஆலோ­சனை கூறி­யுள்ளான்.

இந் நிலையில் சந்­தேக நபர் பாணந்­துறை வரு­வதை உறுதி செய்த பொலிஸார், அவரைக் கைது செய்ய தயா­ராக இருந்­தனர்.  இந் நிலையில் மீள பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ருக்கு அழைப்பை ஏற்­ப­டுத்­திய சந்­தேக நபர் வரும் வழியில் ஜீப் வண்டி பழு­த­டைந்­து­விட்­ட­தா­கவும்    பஸ்ஸில் வரு­வ­தா­கவும் கூறி­யுள்ளார். இந் நிலையில் பரிசுப் பொருட்­க­ளுடன் பஸ்ஸில் வந்து இறங்­கிய சந்­தேக நபரை பொலிஸார் கைது செய்­தனர். 

இத­னை­ய­டுத்து, அவ­ரிடம் முன்­னெ­டுத்த விசா­ர­ணையில் அந்த வர்த்­தக நிலை­யத்தில் திரு­டிய பணம் பொருட்கள் ஊடாக  ஒரு இலட்­சத்து 20 ஆயிரம் ரூபா பணத்தை திரட்­டி­ய­தா­கவும்  அதன் பின்னர் அளுத்­கம பகு­தியைச் சேர்ந்த ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த சகோ­த­ரிகள் இரு­வ­ருடன் மஹி­யங்­க­னைக்கு சென்­ற­தா­கவும் தெரி­வித்­துள்ளார். மேற்­படி பணத்தின் மூலம் குறித்த இரு பெண்­க­ளுக்கும் சந்­தேக நபர் ஆடை ஆப­ர­ணங்­க­ளையும் கொள்­வ­னவு செய்து கொடுத்­துள்­ள­மையும் விசாரணையில் தெரியவந்தது.

No comments

Powered by Blogger.