Header Ads



"ஊழலுக்கு இடமில்லை, என்ற செய்தியை வழங்கும் நோக்கிலேயே இச்செயற்பாடு"

அரசாங்கத்துடன் தொடர்புடைய நபர்களைக் கூட விசாரணைக்கு உட்படுத்தி வருவது இந்த அரசாங்கத்தின் கண்டிப்பான செயற்பாட்டை எடுத்துக் காட்டுவதாக மாநகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

ஊழலுக்கு இடமில்லை என்ற செய்தியை வழங்கும் நோக்கிலேயே இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். 

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் முகமாகவே அமைச்சர் இந்த பதிலை அளித்தார். 

அனைத்து தரப்பினர் மீதும் விசாரணை நடத்துவது தொடர்பாக ஜனாதிபதியும், பிரதமரும் நன்றி தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.