பேஸ்புக் நண்பர்களினால் களியாட்டம், போதையுடன் மீட்பு, ஏற்பாட்டாளர் கைது
"முகப்புத்தக ப்ரெண்ட்ஸ்" என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு குழுவினர் புவக்பிட்டிய பகுதியில் இரு நாட்களாக இரவு வேளைகளில் நடத்திய களியாட்ட நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் இடம்பெற்ற இக்களியாட்ட நிகழ்வில் ஈடுபட்ட இப்பிரிவினர் போதையில் சுய நினைவிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் போதைப்பிரியர்களிடம் சமூகத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் குளிசை வகைகள் இதன்போது பயன்படுத்தப்பட்டிருக்கலாமெனவும் போதை தரக்கூடிய பல வெளிநாட்டு உயர்தர மதுபான வகைகள் இங்கு கைப்பற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரத்தினபுரி–அவிசாவளை வீதியிலுள்ள புவக்பிட்டிய பகுதியின் உல்லாச விடுதியொன்றில் இடம்பெற்ற இந்த களியாட்ட நிகழ்வின் அநாகரிக செயற்பாடுகளால் கோபமடைந்த இப்பிரதேச கிராம மக்கள் இவ்விடயத்தை பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்ததையடுத்து இக்களியாட்ட விடுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இங்கு பயன்படுத்தப்பட்ட அதிக விலையுள்ள உத்தரவு பத்திரம் பெறாது விநியோகிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களும் கைப்பற்றப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.
Post a Comment