Header Ads



தலதாவை உன்னிப்பாக, அவதானிக்கும் மஹிந்த

புதிய நீதியமைச்சராக பதவியேற்றுள்ள தலதா அத்துகோரள தனது பணிகளை செய்யும் விதம் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முகத்துவாரம் ஸ்ரீ வெங்கடேஸ்வர் மஹா விஷ்ணு ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எமக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதில்லை, நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றுக்கு அழுத்தம் கொடுப்பதில்லை ஆகிய காரணங்களை கூறி முன்னர் பதவியில் இருந்த நீதியமைச்சரை நீக்கினர்.

இதனால், தற்போது பதவியேற்றுள்ள நீதியமைச்சருக்கு இவை அனைத்தையும் மேற்கொள்ளவேண்டியேற்படும் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.