Header Ads



அமைச்சரவைக்கு வந்த வாள்வெட்டு

கொக்குவிலில் கோப்பாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் குறித்த சிறப்பு விசாரணை அறிக்கை நேற்று -01- அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் இரண்டு காவல்துறையினர் இனந்தெரியாத குழுவினரால் துரத்தித் துரத்தி வெட்டப்பட்டனர். படுகாயங்களுக்கு இலக்கான இவர்கள் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவினால் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் மற்றும் கண்டறிவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

No comments

Powered by Blogger.