Header Ads



டியுசனுக்கு சென்ற மாணவி, கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு

தனியார் வகுப்பு ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த 16 வயது மாணவி கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், மதுகமை பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி பயின்று வரும் மாணவியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார்.

முச்சக்கர வண்டியில் சென்ற மூவர் தன்னை கடத்தியதாகவும், 3 பேரில் ஒருவர் தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் மாணவி முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக, களுத்துறை - நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடங்கொடை பொலிஸ் அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.