Header Ads



சுவர்கத்தில் இருந்துவரும், சுஹதாக்களின் சுகந்தம்


Rauf Hazeer
====================

சுவர்களில் துளைகளா ?
யார் சொன்னது !
அவை
துப்பாக்கிகள் எழுதிய
துர்ப்பாக்கிய
கவிதைகள்.
கிடங்குகள் கபுருகளான 
இடங்களைப் பார்க்கவேண்டுமா....
காட்டுகிறோம் வாருங்கள்
காத்தான்குடிக்கு .
மண் எல்லாம்
மணக்கும்
மையவாடி !
கண்ணீர்த் துளியெல்லாம்
கஸ்தூரி கட்டிகளான
கபுரடி !
மூச்சிழுத்துப் பாருங்கள்.....
முகமெல்லாம் மணக்கிறதா ! ?
அகம் எல்லாம்
அத்தரா ! ?
அது எதுவுமல்ல,
சுவர்கத்தில் இருந்துவரும்
சுஹதாக்களின் 
சுகந்தம் .

2 comments:

  1. இது நடந்து 20 வருடங்களாக (செய்தவர்கள் இருக்கும் போது), பெட்டிப் பாம்பாக உறங்கி விட்டு,
    கடந்த சில வருடங்களாக மட்டும் திடீரென கோமாவிருந்து எழுந்து எல்லாம் ஞாபகம் வந்த மாதிரி இவைகளை நிணைவு கூருவதின் நோக்கம் தான் என்ன?

    ReplyDelete
  2. Alaah will make your heart soft and give the real understanding of the success this world and next world (after death).

    ReplyDelete

Powered by Blogger.