Header Ads



சமல் ராஜபக்சவின் எச்சரிக்கை

நாட்டின் தற்போதைய நிலையில் எதிர்கால சந்ததியினர் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை வருமென சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தங்காலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாட்டின் சொத்துக்கள் விற்கப்படுகின்றன. விற்கப்படும் சொத்துக்களை மீட்டெடுக்கும் போது இலங்கையில் நான்கு தலைமுறைகளை கடந்து விடும்.

அம்பாந்தோட்டை துறைமுகமானது 99 ஆண்டுகளுக்கு சீனாவிடம் குத்தகைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோன்று மத்தள விமான நிலையத்தையும் இந்தியாவிடம் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே நாட்டின் இந்த நிலையில் எதிர்காலத்தில் சந்ததியினர் ஆயுதம் ஏந்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. for all these your and your great brothers are responsible
    you all ate the country
    shameless man

    ReplyDelete

Powered by Blogger.