ஆஜரானார் ரவி, மர்மங்கள் துலங்குமா..?
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க சாட்சியமளிக்க சற்றுமுன்னர் -02- ஆஜரானார்.
130 மில்லியன் ரூபா செலவில் கட்டிய வீட்டை வாடகைக்கு கொடுக்க விரும்பியபோது பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் தானாகவே முன்வந்து அதனை அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு பெற்றுக்கொடுத்தார் என ஈஸ்ட வெஸ்ட் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் வினோதினி விஜேசூரிய ஆணைக்குழுவில் அண்மையில் சாட்சியமளிததிருந்தார்.
அதன்பின்னர் சாட்சியமளித்த க்ளோபல் லொஜிஸ்டிக் ட்ரான்போட்டேசன் நிறுவனத்தின் சிரேஸ்ட நிதி முகாமையாளர் வி. ஜே சின்னையா குறித்த பணத்தை பிரித்தானிய பிரஜையிடமிருந்து பெற்றுக்கொண்டதாகவும் ஆனால் பற்றுச்சீட்டு எவையும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் ரவி கருணாநாயக்க வசித்ததாக கூறப்படும் மொனார்க் ரெசிடன்சி மனைத்தொகுதிக்கு வழங்கப்பட்ட வாடகைப்பணம், அமைச்சர் ரவி கருணாநாயக்க அர்ஜூன் அலோசியசுக்கிடையிலான தொடர்பு, மத்திய வங்கியில் செலுத்திய ஆதிக்கம் போன்ற பல்வேறு சர்ச்சைகளுக்கு பதிலளிப்பாரென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே இரண்டு முறை சாட்சியமளிக்க முடியாதென ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தியிருந்த அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு ஆணைக்குழு இன்று கட்டாயமாக சாட்சியமளிக்க வர வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
ஆனால், பாதுகாப்பு பேரவையில் இடம்பெறும் நிகழ்வொன்றில் கலந்தக்கொள்ள வேண்டும் என்றும் மாலைத்தீவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் குறித்த தினங்களில் தன்னால் ஆணைக்குழுவுக்கு வர முடியாது எனவும் ஆணைக்குழுவுக்கு அறிவித்தல் அளித்திருந்தார்.
ஆயினும் குறித்த விசாரணையில் மேலும் பல முக்கிய விசாரணைகள் அடுத்த வாரத்திலிருந்து ஆரம்பமாகவுள்ள நிலையில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை உடனடியாக ஆஜராக வேண்டும் என ஆணைக்குழு பணிப்புரை விடுத்திருந்தது.
இந்நிலையிலேயே வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளார்.
அத்தோடு பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முக்கியமான சாட்சியமாக கருதப்படும் பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸின் சாட்சியப்பதிவுகள் அடுத்த வாரம் முழுவதும் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
We have seen lots of councils all over the world. Even former president Tony Blaine has to face one of them for Iraque War!!!
ReplyDeletePent House was rented out and subsequently purchased by the company owned by Ravi's Wife and Daughter. Ravi has asked from them "Why are you wasting my time and calling me for enquiry". No Answer and Game is over.
ReplyDelete