Header Ads



சிங்கள - தமிழ் மறுமலர்ச்சிக்கான அமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் காணி அபகரிப்பினை நிறுத்த நடவடிக்கையெடுக்குமாறு கோரி மட்டக்களப்பில் விசேட மத நல்லிணக்க வழிபாடும் கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தலைமையில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றிணைந்து இந்த வழிபாட்டினையும், கவன ஈர்ப்பு போராட்டத்தினையும் முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிங்கள - தமிழ் மறுமலர்ச்சிக்கான அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது பிள்ளையாரடி ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன், பௌத்த வழிபாடுகளும் நடைபெற்றன.

வழிபாடுகளைத் தொடர்ந்து மட்டக்களப்பு முறாவோடை சக்தி வித்தியாலயத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானம் ஆக்கிரமிப்பு உட்பட மட்டக்களப்பில் இடம்பெறும் காணி அபகரிப்புக்களுக்கு எதிரான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொது அமைப்புகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.

9 comments:

  1. முஸலிம்களின் காணி கொள்ளைகளை எதிர்த்து தமிழர்கள் மேல் பரிதாபபட்டு சிங்களவர்களே போராடுகிறார்கள்.
    கிழக்கில் TNA என்ன பண்ணுகிறார்கள்?

    ReplyDelete
    Replies
    1. உங்களை தான் ஏதிர்பார்திருக்கிராங்க

      Delete
  2. Intha saithiya asiritar oru muttal

    ReplyDelete
  3. ஆடு நனைகின்ரது என்று ஓனாய் ....


    ReplyDelete
  4. Aadu nanaithu endu oanai kawala patticham!!

    ReplyDelete
  5. நாளை இதே தேரன் அரச காணிகளில் சிங்களவர்களை குடியேற்றுவான் அப்போது தமிழ் பயங்கரவாதிகள் வாயடைத்து நிற்பீர்கள்

    ReplyDelete
    Replies
    1. @Gt x, அதற்காக முஸ்லிம் பயங்கரவாதிகளை விட முடியுமா?

      Delete

Powered by Blogger.