Header Ads



பணம் இல்லாமல் மனைவியின் உடலை, சுமந்துசென்றவர் தற்போது லட்சாதிபதி


ஒரு நேரத்தில் பணம் இல்லாமல் மனைவியின் உடலை சுமந்து சென்றவர் தற்போது லட்சாதிபதியாகி உள்ளார்.

உயிரிழந்த மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற கணவனுக்கு பல்வேறு நாடுகளிலிருந்து நிதி உதவி குவிந்ததால் அவர் பெரும் பணக்காரராக மாறியுள்ளார்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தானா மாஞ்சி. இவர் மனைவி சில மாதங்களுக்கு முன்னர் உடல்நல பிரச்சனையால் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். மனைவி சடலத்தை வீட்டுக்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி மாஞ்சிக்கு கிடைக்கவில்லை, வாகனத்துக்கு பணம் இல்லாததால் மனைவி சடலத்தை மாஞ்சி தோளில் சுமந்து சென்றார்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ, இணையத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உள்நாடு மட்டுமல்லாமல், உலக நாடுகளில் இருந்தும் தற்போது மாஞ்சிக்கு நிதி உதவிகள் குவிந்து வருகின்றன.  பஹ்ரைன் இளவரசர் கலீபா ஒன்பது லட்சம் ரூபாய்க்கான காசோலையை அனுப்பினார். 

1 comment:

  1. இச் செய்திக்கும் அன்டனி comments எழுதுவான் அதற்கு முக்கியத்துவம் வழங்கி பிரசுரிக்கவும். அப்படியானால் இதுவும் அத்தகையவர்களை ஊக்குவிக்கும் கேடு......தளம்தான்.

    ReplyDelete

Powered by Blogger.