ரோஹின்யா முஸ்லிம்கள் பற்றி உலகம் செவிடாகவும், குருடாகவும் இருக்கக் கூடாது - எர்துகான்
மியன்மார் சிறுபான்மை ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக அந்நாட்டு அரசின் மறைமுக ஆதரவில் இடம்பெறும் திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு தொடர்பில் சர்வதேச சமூகம் செவிடாகவும் குருடாகவும் இருக்காது காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என துருக்கி ஜனாதிபதி அர்துகான் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப் பெரிய 'நாடற்ற சிறுபான்மை சமூகமாக' அடையாளப்படுத்தப்படும் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான மியன்மார் இராணுவத்தின் வரம்பு மீறிய அட்டூழியங்கள், தாக்குதல்கள் கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ளன. உயிரைக் கையில் பிடித்த வண்ணம் கொத்துக் கொத்தாக மக்கள் பங்களாதேஷ் நாட்டை நோக்கி அடைக்கலம் கோரிப் படையெடுக்கின்றனர்.
“மியன்மாரில் அரசின் மறைமுக ஆதரவில் நடாத்தப்பட்டு வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேசம் குருடாகவும் செவிடாகவும் பாசாங்கு செய்வது வருந்தத்தக்கது” என அர்துகான் மேலும் தெரிவித்தார்.
அடுத்த மாதம் இடம்பெறவிருக்கும் ஐ.நா. சபையின் பொது ஒன்றுகூடலில் மியன்மாரில் நடாத்தப்பட்டு வரும் இனச்சுத்திகரிப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அழுத்தம் கொடுக்கவிருப்பதாக அர்துகான் உறுதியளித்துள்ளார். மியன்மார் அரசின் அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையாக கண்டனங்களை பதிவு செய்வதாகவும், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் ஆதரவுடன் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவிருப்பதாகவும், இது தொடர்பில் சர்வேதேச நாடுகள் உதவிக்கரங்களை நீட்டும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Exectlly u right the only one leader voice for Muslim
ReplyDeleteவேடிக்கை பார்க்காமல் உங்களுடைய ராணுவத்தை களத்திற்கு அனுப்புங்கள்
ReplyDeleteஒரு கை தட்டினால் மட்டும் சத்தம் வராது. பல கைகள் சேர்ந்து தட்டினால் அதிக சத்தம் கேட்கும்.
ReplyDelete