Header Ads



வாத்துக்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைப்பு


வாத்துக்களை கைது செய்த பொலிசார் அதை சிறையில் அடைத்த விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் சுற்றி திரிந்த 4 வாத்துக்கள் அந்த பகுதியில் இருந்த எரிவாயு நி‌லையத்திற்குள் புகுந்துள்ளது.

இது குறித்து எரிவாயு நிலைய ஊழியர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் நான்கு வாத்துக்களை கைது செய்து காரில் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு நான்கு வாத்துக்களும் சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளது. சட்டப்படி எரிவாயு நிலையத்திற்குள் அனுமதியின்றி யார் சென்றாலும் அவர்களை பொலிசார் கைது செய்து சிறையில் அடைப்பது வழக்கம்.

இந்நிலையில் தான், இதே செயலில் ஈடுபட்ட வாத்துக்களையும் கைது செய்து தங்களின் கடமையை பொலிசார் வெளிப்படுத்தியுள்ளனர்.

No comments

Powered by Blogger.