Header Ads



எங்கள் மீது, நம்பிக்கை வையுங்கள் - உபுல் உருக்கம்

தங்கள் மீது நம்பிக்கை கொள்ளுமாறு இலங்கை ஒருநாள் கிரிக்கட் அணியின் தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார். எந்தவொரு அணியும் பின்னடைவுகளை சந்திக்கும் என குறிப்பிட்டுள்ள அவர் நெருக்கடியான தருணங்களில் அனைவரினதும் ஆதரவு அவசியப்படுவதாக  தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ள அவர் இலங்கை அணி ஈட்டிய வெற்றிகள் தொடர்பில் ரசிகர்கள் மறந்து விடக் கூடாது என   கோரியுள்ளார்.

உலகின் எந்தவொரு அணியும் பின்னடைவுகளை சந்திக்கும் எனவும், இது அனைத்து அணிகளுக்கும் பொதுவானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 18 ஆண்டுகளாக இலங்கை அணி டெஸ்ட், ஓருநாள் மற்றும் டுவன்ரி20 போட்டிகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியிருந்தது எனவும், அண்மைய நாட்களாக அணி பின்னடைவை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்துள்ள உபுல் தரங்க தந்திரோபாய காரணங்களுக்காக சில விடயங்களை பகிரங்கமாக கூற முடியாது எனவும்  தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.