நல்லாட்சிக்கு பேரிடி, வீழ்ந்தது பங்குச்சந்தை
பிணைமுறி விவகாரம் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளால் பங்குச்சந்தையில் பங்குகளின் பெறுமதி கடந்த ஏழு நாட்களாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இதுவே இந்த வருடத்தின் இரண்டாவது மிகப் பெரிய வீழ்ச்சி எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது பிணை முறி விவகாரங்கள் தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதால் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாது போய்விடும் என்ற காரணத்தினால் உள்ளூர் முதலீட்டாளர்களின் முதலீடுகள் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசியல் ஸ்திரத்தன்மை ஆட்டங்காணும் என்ற எதிர்வுகூறலில் முதலீட்டு நடவடிக்கைகள் பல ஸ்தம்பிதமடைந்துள்ளன. மேலும், பங்குதாரர்கள் 56.47 பில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்துள்ளனர். பங்குச்சந்தை சுட்டெண்களான ASPI ஆனது 1.91 சதவீதத்தாலும் S&P SL 20 ஆனது 1.40 சதவீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இது குறித்து சிரேஷ்ட பொருளியலாளர் லலித்சிறி குணருவான் கருத்துத் தெரிவிக்கும் போது, இலங்கையின் நிதி நிலைமையை காட்டும் குறியீடாக பங்குச்சந்தையின் வீழ்ச்சி எழுச்சி காணப்படாத போதிலும் இந்நிலைமையானது இலங்கையின் நிதிமுகாமைத்துவமானது படுமோசமடைந்துள்ளமையினை சுட்டிக்காட்டுகின்றது. அத்துடன், இந்த அரசாங்கம் வெளிநாட்டு நாணயங்களை ஒழுங்காக முகாமை செய்வதிலும் தவறு விடுகின்றது.
மேற்குறிப்பிட்ட காரணங்களினால் வெளிநாட்டு நாணய நிதியத்தின் தாக்கத்தால் இலங்கையின் கொள்கை வட்டிவீதத்தில் தளம்பல் ஏற்படும் என்ற அச்சம் இலங்கை மத்திய வங்கிக்கு காணப்பட்டது. அத்துடன், பங்குச்சந்தையும் பங்குச்சந்தையின் அலுவலக நாட்களான, போயா, விடுமுறை தினங்கள் தவிர்ந்த நாட்களான கடந்த ஜூலை 17 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 24 ஆம் திகதி வரையான ஏழு நாட்களில் வீழ்ச்சியடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment