Header Ads



தென்கொரியாவில் உள்ள, இலங்கையர்களின் கவனத்திற்கு..!

தென்கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் வெளியேறுவதற்கான பொதுமன்னிப்புக் காலம் எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனைத் தெரிவித்துள்ளது.     

கடந்த ஜூலை மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் குறித்த காலப்பகுதிக்குள் தென்கொரியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள இலங்கையர்கள் நாடுதிரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த காலப்பகுதியில் நாடு திரும்பும் பணியாளர்கள் தொடர்பில் சட்டநடிக்கை எடுக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.