Header Ads



போலி ஆன்மீகத்தின் முடிவு, இப்படித்தான் இருக்கும்...


ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டம், கருசார் மோதியா கிராமத்தில் ஜாட் சீக்கிய குடும்பத்தில் 1967 ஆகஸ்டில் குர்மீத் ராம் ரஹீம் சிங் பிறந்தார். 7-வது வயதிலேயே தேரா சச்சா அமைப்பில் இணைந்தார். 23-வது வயதில் அதன் தலைமை பொறுப்பை ஏற்றார். 'நான் தெய்வ பிறவி' என்று கூறி பலரை தனது ஆன்மீக வலைக்குள் வீழ்த்தினார். 

இவரது ஆசிரமத்தில் இரண்டு கொலைகள் நடந்துள்ளன. இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 400 இளைஞர்களுக்கு இவரது ஆசிரமத்தில் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது பாலியல் விவகாரத்தில் இவருக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளதால்  பஞ்சாப், ஹரியானா, டெல்லி போன்ற மாநிலங்கள் இன்று பற்றி எரிகின்றது. ஒரு குற்றவாளியோடு மோடி சமமாக நின்று போஸ் கொடுக்கிறார். பிஜேபி அமைச்சர்கள் இவரது காலில் விழுகின்றனர். இந்துத்வாவின் முழு ஆசியோடு நேற்று வரை வலம் வந்துள்ளார். இவரது கைதுக்காக இறந்தவர்களின் எண்ணிக்கை 50 ஐ தாண்டியுள்ளது. பல கோடி அரசு சொத்துக்கள் நாசம்.

போலி ஆன்மீகத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும். இந்து மதத்திலும், சீக்கிய மதத்திலும் ஆன்மீகத்தில் மிகப் பெரிய வெற்றிடம் உள்ளது. எனவேதான் மன அமைதி தேடி இத்தனை கோடி பேர் போலி சாமியார்களின் பிடியில் வீழ்கிறார்கள்.

No comments

Powered by Blogger.