Header Ads



"அரசாங்கத்திலிருந்து ரவி வெளியேறுவார்"

அமைச்சர் ரவி கருணாநாயக்க அரசாங்கத்திலிருந்து விரைவில் வெளியேறுவார் என ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

அரசாங்கத்திலிருந்து வெளியேறும் எண்ணத்தில் உள்ள தமது கட்சி உறுப்பினர்களிடம் ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியதாக ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.