Header Ads



விக்னேஸ்வரன் - மௌலவி சுபியான் சந்திப்பு

-பாறுக் ஷிஹான்-

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை   மக்கள் பணிமனையினதும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட கிளையின் தலைவரும் 2017ம் ஆண்டின் தேசிய மீலாத் விழாவின் நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமான  மௌலவி சுபியான்  சந்தித்து உரையாடியுள்ளார்.

கைதடியில் அமைந்துள்ள   வடமாகாண முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்தில் இன்று (02.08.2017) இடம்பெற்ற இச்சந்திப்பின் போது யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய மீலாத் விழா தொடர்பாகவும்  தபால்  மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் எம்.எச்.எம். ஹலீம் அவர்களுடனான சந்திப்பும் கலந்துரையாடல் விடயமாகவும் யாழ்ப்பாணம்   புதிய சோனகதெரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள பரச்சைவெளி தனியார் காணியை உரிய முறையில் பெற்று குடியிருப்பதற்கு பயன்படுத்துவதற்கு யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடுவதற்கும் இதற்கு சாதகமான நல்ல முடிவைப் பெற்றுத்தருவது தொடர்பாகவும் முதலமைச்சருக்கு எடுத்துக் கூறப்பட்டது.

 இவ் இரண்டு விடயத்திற்கும்  முதலமைச்சர் அவர்கள் ஒத்துழைப்பு வழங்குவதாக  தெரிவித்ததாக மௌலவி சுபியான் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.