Header Ads



தாமரை மொட்டுச் சின்னம், பிரச்சாரப்படுத்த களமிறங்கும் மஹிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு புதிய உறுப்பினர்களை சேர்த்துக் கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நாடு முழுவதும் கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கூட்டங்களில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் கலந்து கொள்ளவுள்ளார். 

மேலும் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் ஜனாதிபதி கலந்து கொள்ளும் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிப்போர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தாமரை மொட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளை சுதந்திர கலைஞர்கள் அமைப்பின் கலைஞர்கள் சிலரும் பொதுஜன முன்னணியின் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

400 கலைஞர்கள் தமது அமைப்பில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளதாகவும் மேலும் 700 பேரை உறுப்பினர்களாக சேர்த்து கொள்ளவுள்ளதாகவும் சுதந்திர கலைஞர்கள் அமைப்பு கூறியுள்ளது.

No comments

Powered by Blogger.