Header Ads



உலகின் மிகப்பெரிய விமானத்தில் பறக்க, இலங்கையர்களுக்கு வாய்ப்பு

உலகின் மிகப்பெரிய விமானத்தின் மூலம் விமான போக்குவரத்தில் ஈடுபட இன்று -14- முதல் இலங்கையர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது..

அதற்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும், மிகப்பெரிய விமானம் இன்று முதல் உத்தியோகபூர்வமாக அதன் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை மிகப்பெரும் பொருட் செலவில் புனரமைக்கப்பட்டது. அதற்கமைய உலகின் மிகப்பெரிய விமானமான A-380 என்ற விமானமே கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்றைய தினம் தரையிறங்கவுள்ளது.

குறித்த விமானம் தனது விமான சேவையை பொதுவான முறையில் தொடர்ந்து மேற்கொள்ளும் என போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. is this A380 belongs to Srilankan Airline?

    ReplyDelete
  2. :) . I think no. srilankan Airlines dont have the capacity to purchase and maintain Airbus A380 .

    ReplyDelete

Powered by Blogger.