பரீட்சை மண்டபத்தில், மது போதையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்
இந்தாண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தரப்பரீட்சைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பரீட்சை மண்டபங்களின் பாதுகாப்பிற்காக பரீட்சை நிலையங்களில் பொலிஸாரை பாதுகாப்பில் ஈடுபடுத்துவது வழமை.
அதேபோன்று வென்னப்புவ கல்வி வலயத்திற்குட்ட கட்டுகேந்த சங்கபோதி வித்தியாலய மண்டபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மதுபோதையில் இருந்துள்ளார்.
இது குறித்து தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸ் அதிகாரி, கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.
மருத்துவ அறிக்கையில் குறித்த பொலிஸ் அதிகாரி மதுபோதையில் இருந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து குறித்த பொலிஸ் அதிகாரி பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
Post a Comment