Header Ads



தம்­புள்ளை பள்­ளி­வாசல், இழு­ப­றி தொடருகிறது..!

-ARA.Fareel-

நீண்­ட­கா­ல­மாக தீர்க்­கப்­ப­டாது இழு­ப­றியில் இருக்கும்  தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வாசல் பிரச்­சி­னைக்கு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க மூலம் விரைவில் தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­க­வுள்­ள­தாக அஞ்சல், அஞ்சல்  சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கா­ரங்கள்  அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார். 

தம்­புள்ளை பள்­ளி­வா­சலை வேறோர் இடத்­துக்கு  இடம்­மாற்­று­வ­தற்கு நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை  கோரிய ஆவ­ணங்கள் அனைத்தும் அமைச்­சினால்  உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு சமர்ப்­பிக்­கப்­பட்டும்  பிரச்­சி­னைக்கு இது­வரை தீர்வு வழங்­கப்­ப­டா­தி­ருப்­பது பற்றி பிர­த­ம­ரிடம் முறை­யி­ட­வுள்­ள­தா­கவும் அவர் கூறினார். 

தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வா­சலை  வேறோர் இடத்­துக்கு இடம்­மாற்­று­வது தொடர்பில்  கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.  அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,  

கடந்­த­கால மஹிந்த ராஜபக் ஷவின்  ஆட்­சிக்­கா­லத்­திலே தம்­புள்ளை பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­டது. பௌத்­தர்­களின் புனித பூமியில் பள்­ளி­வாசல் அமைந்­துள்­ள­தா­கவும் அதனை  அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்ற வேண்­டு­மெ­னவும்  இன­வா­திகள் அழுத்­தங்­களைக் கொடுத்­தார்கள். ஆனால் மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில்  இப்­பி­ரச்­சினை  தீர்க்­கப்­ப­ட­வில்லை. 

தம்­புள்ளை பள்­ளி­வாசல் பிரச்­சி­னைக்கு தீர்வு பெற்­றுத்­த­ரு­வ­தா­கவே  நல்­லாட்சி அர­சாங்கம்  பத­விக்கு வந்­தது. தற்­போது பள்­ளி­வா­ச­லுக்­கான புதிய  காணி­யொன்று இனம் காணப்­பட்­டுள்­ள­தாக நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை தெரி­வித்­துள்­ளது. பொருத்­த­மான காணி வழங்­கப்­பட்டால் பள்ளிவாசலை இடம் மாற்­றிக்­கொள்­வ­தாக பள்­ளி­வாசல்  நிர்­வா­கமும் தெரி­வித்­துள்­ளது. 

இந்­நி­லையில் இவ்­வி­வ­காரம் தொடர்ந்தும் கால தாம­தப்­பட்டு வரு­கி­றது. இது தொடர்பில் பிர­த­மரைத்  தெளி­வு­ப­டுத்தி விரை­வு­ப­டுத்­த­வுள்ளேன் என்றார். 

இதே­வேளை கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர் ரிசாத் பதி­யு­தீ­னி­டமும் பள்­ளி­வாசல் விவகாரத்துக்கு  தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரியுள்ளதாகவும்  அவரும் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்துள்ளதாகவும்  பள்ளிவாசல்  நிர்வாக சபை உறுப்பினர் எஸ்.வை. எம். சலீம்தீன் தெரிவித்தார். 

1 comment:

  1. எல்லாம் மகிந்த ஆட்சிக்கே குறை சொல்ல வேண்டியது தான்.ரவூப் ஹகீம் நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் தம்புள்ள பள்ளிக்காணி பிரச்சினை நல்ல தீர்க்க இருந்திச்சி ஆனால் அவரோ அலட்சியமாக இருந்தாரு .

    ReplyDelete

Powered by Blogger.