Header Ads



யாழ்ப்பாணத்தில் நல்ல, பேரீச்சம் பழம் கிடைக்கிறது - உரிமையாளர் மகிழ்ச்சி


இயற்கைக்கு மாற்றீடாக யாழ்ப்பாணத்தில் பேரீச்சை மரம் வெற்றிகரமாக வளர்ந்து பயன்கொடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

பாலைவனப் பகுதியில் விளையக் கூடிய பேரீச்சை மரம் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த ஒருவரின் வீட்டில் விளைந்துள்ளது.

30 வருடங்களாக சாவகச்சேரியில் பேரீச்சை மரம் பாராமரித்து வந்த நிலையில், கடந்த மூன்று வருடங்களாக அதன் பலாபலன்களை தொடர்ச்சியாக பெறுகின்றனர்.

அத்துடன் இந்த மரங்கள் பூத்து காய்த்து நல்ல பழங்கள் கிடைப்பதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

அதிக வெப்பமான காலநிலையில் வளரும் பேரீச்சை மரம் யாழ் மண்ணில் விளைந்தமை அபூர்வமான விடயமாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே மிகவும் குளிரான பகுதியான நுவரெலியாவிலும் பேரீச்சை மரம் வளர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.