Header Ads



நான் அமெ­ரிக்க உள­வா­ளி­யல்ல, புதிய கடற்­படை தள­பதி சின்­னையா தெரி­விப்பு

இலங்கை கடற்­படை மீதான போர்க்­குற்­றங்களை நான் மறுக்­கின்றேன். எனினும் கடற்­படை சீரு­டையில் குற்­றங்கள் இடம்­பெற்­றி­ருக்­கு­மாயின் அவர்­களை தண்­டிப்­பதில் மாற்றுக் கருத்து இல்லை என புதிய கடற்­படை தள­பதி வைஸ் அட்­மிரல் ட்ரவிஸ் சின்­னையா தெரி­வித்தார்.

நான் ஒரு அமெ­ரிக்க உள­வாளி அல்ல. இந்த குற்­றச்­சாட்டை நான் மறுக்­கிறேன் எனவும் அவர்  குறிப்­பிட்டார். புதிய கடற்­படை தள­ப­தி­யாக கடமை பொறுப்­பேற்­றுள்ள வைஸ் அட்­மிரல்  ட்ரவிஸ் சின்­னையா நேற்று கடற்­படை தலை­மை­ய­கத்தில் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை மேற்­கொண்­டி­ருந்த  போதே  மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் அதில் மேலும் குறிப்­பி­டு­கையில், கடற்­ப­டையில் நான் 35 ஆண்­டுகள் சேவை புரிந்­துள்ளேன். இந்த நாட்­டுக்­கா­கவும் நாட்டின் விடு­த­லைக்­கா­கவும் என்­னா­லான சகல சேவை­யி­னையும் நான் எமது கடற்­ப­டை­யி­ன­ருடன் இணைந்து முன்­னெ­டுத்­துள்ளேன். நான் கடற்­ப­டையில் இணைந்த இரண்டு ஆண்­டு­களில் நாட்டில் பயங்­க­ர­வாத போராட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டு­விட்­டது. ஆகவே எனது கடற்­படை பய­ணமும் கடி­ன­மா­ன­தா­கவே அமைந்­தது. யுத்தம் முடியும் வரையில் நான் படையில் இருந்தேன். எனினும் யுத்­தத்தை விடவும் சமா­தான காலமே மிகவும் கடி­ன­மான கால­மாக இருந்­தது என்று நான் நம்­பு­கின்றேன். யுத்­தத்தை நிறைவு செய்­ததை விடவும் சமா­தா­னத்தை பலப்­ப­டுத்­தவே எமக்கு கடி­ன­மாக உள்­ளது. மக்­களின் மனங்­களில் இன்றும் யுத்த கல­வரம் மட்­டுமே உள்­ளது. எனவே அதையும் தாண்­டிய சமா­தா­னத்தை நாம் உறுதிப்படுத்த வேண்டும். 

இந்த நாட்டில் மீண்டும் ஒரு போராட்டம் ஏற்­ப­டு­வ­தற்­கான எந்­த­வொரு வாய்ப்­பு­ம் இல்லை என நான் தனிப்­ப­டை­யாக நம்­பு­கின்றேன். இந்த நாட்டில் உள்ள சகல மக்­களும் அப்­பாவி மக்­க­ளே­யாவர். போரில் பொது­மக்­களே அதி­க­மாக உயி­ரி­ழந்­தனர். அவர்­க­ளு­க்கா­க­வுமே இந்த நாட்டை நாம் பயங்­க­ர­வா­தத்தில் இருந்து மீட்­டுள்ளோம். அதேபோல் நாட்டை விட்டு நான் வெளி­யே­றிய காலத்­திலும் இலங்கை கடற்­ப­டைக்­காக பல சேவை­களை செய்­துள்ளேன். அமெ­ரிக்க கடற்­படை அதி­கா­ரி­யாக நான் செயற்­பட்ட காலத்­திலும் என்னால் இலங்கை கடற்­ப­டைக்கு பல்­வேறு சேவைகள் செய்­யப்­பட்­டுள்­ளன. அவர்­க­ளு­ட­னான கூட்டு பாது­காப்பு நகர்­வு­க­ளுக்­காக உத­வி­களை நான் முன்னெ­டுத்­துள்ளேன். ஆனால் இவற்றை இப்­போது பேசு­வதில் எந்த அர்த்­தமும் இல்லை. அவை இடம்­பெற்று நீண்ட கால­மா­கி­விட்­டது. 

கேள்வி :- புலி­களின் பட­கு­களை அழித்த  பின்னர் உங்­க­ளுக்­கான அச்­சு­றுத்­தல்கள் ஏற்­ப­ட­வில்­லையா?

பதில் :- புலி­களின் ஆயுதப் பட­குகள் அழிக்­கப்­பட்­ட­தன் பின்­ன­ணியில் எனது தலை­மைத்­துவம் இருந்­தது. புலி­களின் 10 அதி நவீன ஆயுதக் கப்­பல்­களை நாம் அழித்த போது இந்த செய்தி வெளியில் வர­வில்லை. ஆனால் அவர்­களின் பட­கு­களை அழித்­த­மையே புலி­களின் கடற்­படை பலத்தை குறைக்க பிர­தான கார­ண­மாக அமைந்­தது. இந்த செயற்­பாட்டில் எனது பெயர் வந்­தி­ருக்­கு­மாயின் எனக்கு மட்­டு­மல்ல எனது குடும்­பத்­தி­ன­ருக்கும் அச்­சு­றுத்­த­லாக இருந்­தி­ருக்கும். எனது குடும்­பத்­தினர் தனி­மையில் கண்­டியில் இருந்­தனர். நான் முழு நேர­மாக கடற்­ப­டையில் என்னை ஈடு­ப­டுத்தி இருந்த கார­ணத்­தினால் அவர்­க­ளுக்கு பாது­காப்பு குறை­வா­கவே இருந்­தது. இந்­நி­லையில் எம்மால் இந்த செயற்­பா­டுகள் இடம்­பெற்­றன என்­பது தெரிய வந்­தி­ருக்­கு­மாயின் எமக்கு அச்­சு­றுத்­த­லாக மாறி­யி­ருக்கும். எனினும் எனது பெயர் வெளியில் வர­வில்லை. நான் மட்டும் அல்ல என்­னைப்போல் பலர் யாரென்று தெரி­யாத நிலை­மைகள் இன்றும் உள்­ளனர். என்­னுடன் கட­மை­யாற்­றிய பலர் இன்றும் அடை­யாளம் காட்­டிக்­கொள்­ளாது சேவை­யாற்றி வரு­கின்­றனர்.  இன்றும் எமக்கு அச்­சு­றுத்தல் உள்­ளது. எனினும் நாம் எம்மை பாது­காத்துக் கொள்­ளக்­கூ­டிய நிலையில் உள்ளோம். பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் இல்­லாத கார­ணத்­தினால் எமக்கு அழுத்­தங்கள் இல்லை. 

கேள்வி:- யோஷித்த ராஜபக் ஷ இன்னும் கடற்­ப­டையில் உள்­ளாரா ?

பதில் :- யோஷித்த ராஜபக் ஷ தற்­போது கடற்­ப­டையில் இல்லை. அவ­ருக்­கான விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. ஆகவே அது வரையில் அவரை சேவையில் இருந்து இடை நிறுத்தியுள்ளோம். விசா­ர­ணைகள் முடியும் வரையில் அவர் சேவையில் இருந்து நீக்­கப்­பட்­டுள்ளார். விசா­ர­ணை­களின் பின்னர் தீர்ப்­பு­களை பொறுத்து அவரை மீண்டும் இணைப்­பது குறித்து தீர்­மானம் எடுக்­கப்­படும். இந்த விசா­ர­ணை­களின் பூரண தக­வல்கள் தொடர்பில் இன்னும் நான் அவ­தா­னிக்­க­வில்லை. எனினும் யோஷித்த ராஜபக் ஷ தொடர்பில் பாரிய குற்­றங்கள் இல்லை. அவர் கட­மையில் நேர்த்­தி­யில்­லாது அதிக விடு­மு­றை­களை எடுத்­துள்ளார். தனிப்­பட்ட வெளி­நாட்டு பய­ணங்­களை மேற்­கொண்­டுள்ளார். இந்த விட­யங்­களை பாரிய குற்­ற­மாக கருத முடி­யாது. இவ்­வாறு பலர் உள்­ளனர். அவர்­க­ளுக்­கான கடற்­படை சட்டம் நடை­மு­றையில் உள்­ளது. அதற்­க­மைய தண்­டனை வழங்­கப்­படும். 

No comments

Powered by Blogger.