Header Ads



இலங்கையிலிருக்கும். மியன்மார் அகதிகள், தனி வீட்டுக்கு மாற்றம்

-ARA.Fareel-

மிரி­ஹான பொலிஸ் நிலைய விஷேட தடுப்பு முகாமில் தங்க வைக்­கப்­பட்­டுள்ள மியன்மார் முஸ்லிம் அக­திகள் தடுப்பு முகா­மி­லி­ருந்தும் அகற்­றப்­பட்டு கல்­கி­ஸையில் தனி­யான வீடொன்­றுக்கு இடம் மாற்­றப்படவுள்ளனர். 

மிரி­ஹான பொலிஸ் நிலைய விஷேட தடுப்பு முகாமில் மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் அக­தி­க­ளுக்கு இடம் பற்­றாக்­குறை நில­வு­வ­தாக பொலிஸார் தெரி­வித்து வந்த நிலையில் அவர்கள் அங்­கி­ருந்தும் இடம் மாற்­றப்­படவுள்ளனர் என மியன்மார் அக­திகள் விவ­கார நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ள தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத் சாலி தெரி­வித்­துள்ளார். 

தடுப்பு முகா­மி­லி­ருந்தும் அக­தி­களை இடம் மாற்­று­வ­தற்கு வெளி­வி­வ­கார அமைச்சு, குடி­வ­ரவு –குடி­ய­கல்வு திணைக்­களம், மிரி­ஹான பொலிஸார், யு.என்.எச்.சி.ஆர் நிறு­வனம் என்­பன அனு­மதி வழங்­கி­யுள்­ள­தா­கவும் அசாத் சாலி தெரி­வித்தார். 

மியன்மார் அக­தி­களை வேறோர் இடத்­துக்கு இடம்­மாற்­று­வ­தற்கு நீதி­மன்றின் உத்­த­ர­வினைப் பெற்­றுக்­கொள்­ள­பட வேண்­டி­யுள்­ளது. எதிர்­வரும் 17 ஆம் திகதி அக­திகள் காங்­கே­சன்­துறை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­ப­ட­வுள்­ளனர். 

இந்­நி­லையில் 17 ஆம் திக­திக்கு முன்பு மியன்மார் அக­தி­களை இடம் மாற்­று­வ­தற்­கான உத்­த­ர­வினைப் பெற்­றுக்­கொள்­வ­தாக அசாத்­சாலி தெரி­வித்தார். 

இந்­தி­யா­வி­லி­ருந்து படகு மூலம் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு ரோஹிங்யா முஸ்லிம் அக­திகள் பய­ணித்த போது படகு கோளா­றுக்­குள்­ளாகி இலங்­கையின் வடக்கு கடல் எல்­லையில் கைது செய்­யப்­பட்­டனர். பின்பு அவர்கள் காங்­கே­சன்­துறை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்படுத்­தப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களின் 7 ஆண்கள் 7 பெண்கள் மற்றும் 16 பிள்­ளைகள் அடங்­கு­கின்­றனர். 

No comments

Powered by Blogger.