Header Ads



அலரி மாளிகையில், ரவிக்கு உயர் பதவி

வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு நிகரான அதிகாரங்களுடன் கூடிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

அவருக்கு அரச இலச்சினையுடன் கூடிய கடித தலைப்புகளில் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அலரி மாளிகையில் இலக்கம் 105 என்ற அறையில் ரவி கருணாநாயக்கவின் அலுவலகத்தை நடத்திச் செல்ல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் 2017 என்ற பெயரிலான திட்டத்தின் பதவியே ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து கொண்டு அரச உத்தியோகபூர்வ இலச்சினையுடன் கூடிய கடித தலைப்புகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கு கடந்த 22 ஆம் திகதி அனுப்பியுள்ள கடிதம் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.