இலங்கை கிரிக்கெட், பயிற்சியாளரின் குமுறல்..!
இலங்கை கிரிக்கெட் அணியை மீள் எழுச்சி பெறச் செய்யும் தனது முயற்சியை பலரின் தலையீடுகள் பாதிப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்காலப் பயிற்றுநர் நிக் போதாஸ் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு எதிராக ரங்கிரி தம்புளையில் நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை படுதோல்வி அடைந்த பின்னரே அவர் இதனைக் கூறினார்.
போட்டியின் ஆரம்பக் கட்டத்தில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 139 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் இருந்த இலங்கை அணி எஞ்சிய 9 விக்கெட்களை 77 ஓட்டங்களுக்கு இழந்தது. அத்துடன், ஷிக்கர் தவான், விராத் கோஹ்லி ஆகியோரின் அதிரடியின் பலனாக 9 விக்கெட்களால் இலங்கை தோல்வியைத் தழுவியது.
இந்தத் தோல்வியால் மனம் நொந்துபோன சில இரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், இலங்கை அணியினரின் பஸ் வண்டிக்கு முன்னால் கூடி தமது எதிர்ப்பையும் வெளியிட்டனர்.
இதனை அடுத்து பொலிஸார் தலையிட்டு இரசிகர்கள் குழுவை அப்புறப்படுத்தியதுடன் இலங்கை அணியினரின் பஸ் வண்டியையும் வழியனுப்பி வைத்தனர்.
இந்தத் தோல்வியானது மனதைப் புண்படுத்துவதுடன் மனக் குழப்பத்தையும் தோற்றுவிக்கின்றது என போத்தாஸ் கூறினார்.
‘‘இந்தத் தோல்வியால்் ஆத்திரவசப்படுவது இயல்பு. ஆனால் வீரர்கள் மீது நான் ஆத்திரம் கொள்ளவில்லை.
அவர்களிடம் கோரப்படும் அளவுக்கு அதிகமாக அவர்கள் கடுமையாக உழைக்கின்றனர். அவர்கள் சிறந்தவர்கள். அணியின் உதவியாளர்களும் தங்களாலான சகலதையும் செய்கின்றனர்.
அவர்கள் நேரம், காலம் பாராமல் உழைப்பதுடன் வீரர்களுடன் இணைந்து திட்டங்களையும் வகுக்கின்றனர். வீரர்களின் தங்குமறையில் யாரும் தவறிழைக்கவில்லை.
உண்மையில் எம்மால் திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனது. இதனால் ஆத்திரவசப்படத்தான் செய்வோம். ஆனால், பலரது தலையீடுகள் தான் இதுற்கு காரணம் என்பதை திட்டவட்டமாகக் கூறலாம்’’ என்றார் போத்தாஸ்.
தனக்கு உரிய ஆளுகை வழங்கப்பட்டால் அணியின் முன்னேற்றத்திற்கான சரியான கால எல்லையை வரையறுக்க முடியும் எனவும் ஆனால், அதற்கான சூழ்நிலை இங்கு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
‘‘அணி மீதான பொறுப்பும் கட்டுப்பாடும் எனக்கு இருந்தால் எம்மால் ஒரு காலவரையறையை கூற முடியும். ஆனால் தொட்டதற்கெல்லாம் மற்றவர்களையும் கேட்கவேண்டியுள்ளது. என்னைப் பொறுத்தமட்டில் எங்களைத் தனியாக விட்டுவிட்டால், இந்த வீரர்களுடன் இணைந்து செயற்பட அனுமதித்தால் அடுத்த ஆறு மாதங்களில் அணியை உறுதியான நிலைக்கு இட்டுச் செல்ல முடியும்.
அத்துடன், திறமையும் தொடரும்’’ என போத்தாஸ் மேலும் தெரிவித்தார்.‘‘வீரர்கள் உண்மையில் இயல்பாகவே திறமைசாலிகள். அவர்களுக்கு கால அவகாசம் வழங்குவதுடன் நேசத்தையும் பாசத்தையும் பொழிந்து அவர்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டி எழுப்பினால் பெறுபேறுகளை விரைவில் காணலாம்’’ என்றார் அவர். மேலும், அணியில் தொடர்ச்சியாக இடம்பெறும் மாற்றங்களும் அணியின் திறமையைப் பாதிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவுக்கு எதிராக ரங்கிரி தம்புளையில் நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை படுதோல்வி அடைந்த பின்னரே அவர் இதனைக் கூறினார்.
போட்டியின் ஆரம்பக் கட்டத்தில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 139 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் இருந்த இலங்கை அணி எஞ்சிய 9 விக்கெட்களை 77 ஓட்டங்களுக்கு இழந்தது. அத்துடன், ஷிக்கர் தவான், விராத் கோஹ்லி ஆகியோரின் அதிரடியின் பலனாக 9 விக்கெட்களால் இலங்கை தோல்வியைத் தழுவியது.
இந்தத் தோல்வியால் மனம் நொந்துபோன சில இரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், இலங்கை அணியினரின் பஸ் வண்டிக்கு முன்னால் கூடி தமது எதிர்ப்பையும் வெளியிட்டனர்.
இதனை அடுத்து பொலிஸார் தலையிட்டு இரசிகர்கள் குழுவை அப்புறப்படுத்தியதுடன் இலங்கை அணியினரின் பஸ் வண்டியையும் வழியனுப்பி வைத்தனர்.
இந்தத் தோல்வியானது மனதைப் புண்படுத்துவதுடன் மனக் குழப்பத்தையும் தோற்றுவிக்கின்றது என போத்தாஸ் கூறினார்.
‘‘இந்தத் தோல்வியால்் ஆத்திரவசப்படுவது இயல்பு. ஆனால் வீரர்கள் மீது நான் ஆத்திரம் கொள்ளவில்லை.
அவர்களிடம் கோரப்படும் அளவுக்கு அதிகமாக அவர்கள் கடுமையாக உழைக்கின்றனர். அவர்கள் சிறந்தவர்கள். அணியின் உதவியாளர்களும் தங்களாலான சகலதையும் செய்கின்றனர்.
அவர்கள் நேரம், காலம் பாராமல் உழைப்பதுடன் வீரர்களுடன் இணைந்து திட்டங்களையும் வகுக்கின்றனர். வீரர்களின் தங்குமறையில் யாரும் தவறிழைக்கவில்லை.
உண்மையில் எம்மால் திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனது. இதனால் ஆத்திரவசப்படத்தான் செய்வோம். ஆனால், பலரது தலையீடுகள் தான் இதுற்கு காரணம் என்பதை திட்டவட்டமாகக் கூறலாம்’’ என்றார் போத்தாஸ்.
தனக்கு உரிய ஆளுகை வழங்கப்பட்டால் அணியின் முன்னேற்றத்திற்கான சரியான கால எல்லையை வரையறுக்க முடியும் எனவும் ஆனால், அதற்கான சூழ்நிலை இங்கு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
‘‘அணி மீதான பொறுப்பும் கட்டுப்பாடும் எனக்கு இருந்தால் எம்மால் ஒரு காலவரையறையை கூற முடியும். ஆனால் தொட்டதற்கெல்லாம் மற்றவர்களையும் கேட்கவேண்டியுள்ளது. என்னைப் பொறுத்தமட்டில் எங்களைத் தனியாக விட்டுவிட்டால், இந்த வீரர்களுடன் இணைந்து செயற்பட அனுமதித்தால் அடுத்த ஆறு மாதங்களில் அணியை உறுதியான நிலைக்கு இட்டுச் செல்ல முடியும்.
அத்துடன், திறமையும் தொடரும்’’ என போத்தாஸ் மேலும் தெரிவித்தார்.‘‘வீரர்கள் உண்மையில் இயல்பாகவே திறமைசாலிகள். அவர்களுக்கு கால அவகாசம் வழங்குவதுடன் நேசத்தையும் பாசத்தையும் பொழிந்து அவர்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டி எழுப்பினால் பெறுபேறுகளை விரைவில் காணலாம்’’ என்றார் அவர். மேலும், அணியில் தொடர்ச்சியாக இடம்பெறும் மாற்றங்களும் அணியின் திறமையைப் பாதிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
Post a Comment