Header Ads



இளஞ்செழியனை நேரில் சந்தித்து, பௌத்த தேரர் வாழ்த்து

முன்னாள் இராணுவ ஜெனரல் ஆனந்த வீரசேகர என்று அழைக்கப்படும் ஆனந்த தேரர் யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ். மாவட்ட மேல்நீதிமன்ற கட்டடத்தொகுதிக்குச் சென்ற ஆனந்த தேரர், அங்கு வைத்து நீதிபதி இளஞச்செழியனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ்.மாவட்ட நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தையடுத்து அவர் உயிரிழந்தார். 

இந்நிலையில் அவரின் பிரிவை தாங்கமுடியாது யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி அனைவர் முன்னிலையிலும் கண்ணீர் விட்டு அழுதிருந்தார்.

குறித்த சம்பவத்தை அவதானித்த முன்னாள் இராணுவ ஜெனரல் ஆனந்த வீரசேகர என்று அழைக்கப்படும் ஆனந்த தேரர், நீதிபதியின் இவ்வாறான செயற்பாடு குறித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.