அங்கீகரிக்கப்பட்ட ஹஜ், முகவர்களை மாத்திரமே நாடுங்கள் - முதலில் செல்பவர்களுக்கே வாய்ப்பு - பாஹிம்
இலங்கைக்கு 600 மேலதிக ஹஜ் கோட்டாக்களை வழங்க சவுதி தீர்மானித்துள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை மாத்திரம் இதற்காக நாடும்படி, முஸ்லிம் சமய விவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுபற்றி முஸ்லிம் சமய விவகார அமைச்சின் பிரத்தியேகச் செயலாளரும், ஹஜ் குழு உறுப்பினருமான பாஹிம் குறிப்பிடுகையில்,
இலங்கைக்கு 600 மேலதிக ஹஜ் கோட்டாக்களை வழங்க சவுதி தீர்மானித்துள்ளமையை வரவேற்கிறோம்.
இது ஒரு அரிய வாய்ப்பு. இதனை நமது சமூகம் உரியமுறையில் பயன்படுத்த முடியும்.
அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் முகவர்களை மாத்திரம் நாடி ஹஜ் ஏற்பாடுகளை அவர்கள் செய்யமுடியும்
முதலில் செலபவர்களுக்கே வாய்ப்பு என்றவகையில், முகவர்களை முதலில் நாடுபவர்களுக்கே இந்த வாய்ப்பு கிட்டுமெனவும் பாஹிம் மேலும் சுட்டிக்காட்டினார்.
Post a Comment