'கொள்ளையடித்தவர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது நகைப்புக்குரியது'
கூட்டு எதிர்க்கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் நகைப்புக்குரியது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ரோஹித்த அபேகுணவர்தன, காமினி லொக்குகே, மகிந்தானந்த அளுத்கமகே, நாமல் ராஜபக்ச, எஸ்.எம். சந்திரசேன, விமல் வீரவங்ச போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லாத் தீரமானத்தை கொண்டு வந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் கொள்ளையடிப்புகளில் ஈடுபட்டவர்கள்.
கொள்ளையடித்தவர்கள் இணைந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளமையே நகைப்புக்குரியது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment