Header Ads



ஞானசாரருக்கு இந்நாட்டில், விஷேட சட்டம் உள்ளது - மஹிந்த

ஞானசார தேரருக்கு இந்த நாட்டில் விஷேட சட்டம் உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று -24- இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில், ஞானசார தேரர் நீதிமன்ற அனுமதியின்றி ஜப்பான் சென்றுள்ளமை தொடர்பில் பிரமுகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் போது, “கூட்டு எதிரணியினர் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் ஆயிரம் முறை நீதிமன்றத்திற்கு ஏறி இறங்க வேண்டும், ஆனால் ஞானசார தேரருக்கு இந்த நாட்டில் விஷேட சட்டம் உள்ளது.

இந்த அரசாங்கத்தில் ஞானசார தேரருக்கு இராஜதந்திர அந்தஸ்து பெற்றுக் கொடுத்துள்ளதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவும் அங்கு விசனம் வெளியிட்டுள்ளார்.

2 comments:

  1. ஆரம்ம்பித்து வைத்து நீங்கள் தானே இப்போது புலம்பி என்ன பயன்

    ReplyDelete
  2. This is what yahapalana treat for you

    ReplyDelete

Powered by Blogger.