முழு அரசாங்கதின் மீதும், விரல் நீட்டவேண்டிய நிலைமை உருவாகும்
ராஜித மாத்திரமா குற்றவாளி என்ற கேள்வியை கேட்டால் முழு அரசாங்கதின் மீதும் விரல் நீட்டவேண்டிய நிலைமை உருவாகும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது கடமைகளை சரியாக முன்னெடுக்கவில்லை. அவர் தனிப்பட்ட சில நலன்களை கருத்தில் கொண்டு செயற்படுகின்றார் எனவும் அக்கட்சி தெரிவித்தது.
மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக மேற்கண்டாவாறு குறிப்பிட்டார்.
Post a Comment