Header Ads



"இந்த அரசாங்கத்திற்கு, எதனையும் செய்யத் தெரியவில்லை"

மக்களின் வாக்குரிமையை பறித்துக் கொண்ட இந்த அரசாங்கம் நல்லாட்சி பற்றி பேசுவது நகைப்பிற்குரியது என தென் மாகாணசபை உறுப்பினர் இசுர தொடங்கொட தெரிவித்துள்ளார்.

பெத்தேகம தேர்தல் தொகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

இந்த அரசாங்கம் ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகளில் நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன.

நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த அரசாங்கத்தினால் முடியவில்லை. அனைத்து சக்திகளையும் அடக்குமுறைக்கு உட்படுத்தவே இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.

இந்த அரசாங்கத்திற்கு வேறு எதனையும் செய்யத் தெரியவில்லை.பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் அன்று வாக்களித்த மக்கள் இந்த அரசாங்கம் தொடர்பில் எதிர்பார்ப்பு இழந்திருக்கின்றார்கள்.

ஜனநாயக ரீதியில் மக்களின் உரிமைகளை இந்த அரசாங்கம் பறித்து வருகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.