Header Ads



வடகிழக்கு இணைக்கப்படாவிட்டால், தமிழர்களின் தனித்துவம் அழிக்கப்படும் - விக்னேஸ்வரன்

திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் உருவாக்கப்பட்டு தமிழர்களின் தனித்துவ அடையாளங்கள் 20, 25 வருடங்களில் அழிக்கப்படும் என வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியட்டுள்ள அவர்,

வட,கிழக்கு இணைப்பு, சமஷ்டி, சுயாட்சி போன்ற தமிழர்களின் அபிலாஷைகள் புதிய அரசியலமைப்பில் இடம்பெறாது எனவும் தெரிவித்துள்ளார். ஒற்றையாட்சி அரசியல் அமைப்புதான் மீண்டும் வரும். அதன் ஊடாக திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் உருவாக்கப்பட்டு தமிழர்களின் தனித்துவ அடையாளங்கள் 20, 25 வருடங்களில் அழிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக உத்தியோகபூர்வமான தகவல்கள் எதனையும் நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் நான் இந்த விடயம் தொடர்பாக பேசியதன் அடிப்படையில் அறிந்து கொண்டிருப்பதாவது, சமஷ்டியை சிங்கள மக்கள் எதிர்பார்கள் என்னும் அடிப்படையில் அதனை ஏக்கியறட்ட என சொல்ல பார்கிறார்கள். ஆனால் அதனை ஒற்றையாட்சி எனவும் எடுக்கலாம். குறிப்பாக அதற்கு வியாக்கியானம் கொடுக்கையில் எல்லோரையும் சேர்த்து என அர்த்தப்படுத்த பார்கிறார்கள்.

எனினும் சிங்கள மொழியே முதன்மையானது என்ற அடிப்படையில் ஏக்கியறட்ட என்பது ஒற்றையாட்சி எனவே அர்த்தப்படுத்தப்படும். இந்த நிலையில் ஏக்கியை விட்டு எக்சத் என பாவிக்கும்படி கேட்டிருக்கின்றேன். மேலும் இந்த விடயம் தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்மந்தனுடன் பேசியபோது அதனால் பாதிப்பில்லை என சொன்னார். ஆனால் தான் நான் மறுத்திருக்கிறேன். எனவே சமஷ்டி இல்லாமல் ஒற்றையாட்சி மீண்டும் கொண்டு வரப்படுமானால் எங்களுடைய தனித்துவங்கள் முழுமையாக அழிக்கப்படும்.

இதற்கு நல்ல உதாரணம் மகாவலி தண்ணீர் வடக்குக்கு வரவில்லை. ஆனால் மகாவலியின் பெயரால் தமிழ் மக்களின் காணிகள் பறிக்கப்பட்டு அவற்றில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டும் விட்டார்கள்.

மேலும் வடகிழக்கு இணைப்பும் இல்லை என்ற நிலையிலேயே நிற்பதாக அறிகின்றேன். அதுவும் எமக்கு ஆபத்தான ஒன்றாகவே இருக்கின்றது என்றும் கூறியுள்ளார். குறிப்பாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக்காலத்தில் அம்பாறை மாவட்டத்தை முஸ்லிம் மக்களுக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தை தமிழ் மக்களுக்கும், திருகோணமலை மாவட்டத்தை சிங்கள மக்களுக்கும் வழக்கலாம் என பேச்சு இருந்தது.

ஆனால் இதன் அர்த்தம் வடக்கு கிழக்கு எந்த காலத்திலும் இணைக்கப்பட கூடாது என்பதே. மேலும் கிழக்கு மாகாணத்தில் கடந்த 30, 35 வருடங்களில் சிங்கள மக்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்திருக்கின்றது. இதன் உண்மை என்னவென்றால் அரசாங்கம் திட்டமிட்டு சிங்கள மக்களை வெளியில் இருந்து கொண்டுவந்து குடியேற்றியதே ஆகும்.

எனவே வடகிழக்கு இணைக்கப்படாவிட்டால் எப்படி கிழக்கு மாகாணம் திட்டமிட்ட குடியேற்றங்களால் நிரப்பபட்டதோ அப்படியே வடமாகாணமும் நிரப்பபடும். இதனால் தமிழர்களின் தனித்துவம் முழுமையாக 20, 25 வருடங்களில் அழிக்கப்படும். மேலும் சுயாட்சி இல்லாவிட்டால் எங்களுடைய தனித்துவம் முழுமையாக அழிக்கப்படும்.

நாங்கள் வேறு கலாச்சாரம், பண்பாடு ஒன்றை எதிர்கொள்ள நேரிடும். எனவே வடகிழக்கு இணைப்பு மற்றும், சமஷ்டி, சுயாட்சி போன்ற தமிழ்களின் அபிலாஷைகள் இல்லாத புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கு தீமையையே பெற்று கொடுக்கும் என்றார்.

11 comments:

  1. We as Muslims totally We agree with your above statement but regret to note the following.

    1. Assassination of late Rajiv Gandhi of India.

    2. Evacuation of Muslims from North of Sri Lanka who has equal rights of the language you speak.

    ReplyDelete
  2. We as Muslims totally agree with your above statement but regret to note the following.

    1. Assassination of late Prime Minister of India Rajiv Gandhi.

    2. Evacuation of Muslims from North of Sri Lanka even they have equal rights on the language you speak.

    ReplyDelete
  3. Dear CV
    You are living in a Dreamland. While you are treating Muslims in the North and East as aliens, you expect the Eastern Muslims to consent North East merger. This would would be equivalent to mass suicide by Eastern Muslims. Please try to think broadly,

    ReplyDelete
  4. Dear CV
    You are living in a Dreamland. While you are treating Muslims in the North and East as aliens, you expect the Eastern Muslims to consent North East merger. This would would be equivalent to mass suicide by Eastern Muslims. Please try to think broadly,

    ReplyDelete
    Replies
    1. Dear Peace,
      Even if Tamils treat Muslims like princes, you guys will still vote against tamils to obtain benefits (minister positions/ money) from the Goverment.

      Delete
  5. சரி இணைக்கலாம், பின்வரும் நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப் பட்டால்.....

    1. முதல் பட்டு வருடங்கள் முஸ்லிம்கள் தலைமையின் கீழ் வடகிழக்கு இயங்க வேண்டும்.

    2. வடகிழக்கில் ஈழ போராட்டங்கள் காரணமாக முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட உயிர் உடமைகளுக்கு தமிழ் தரப்பால் நஷ்டஈடு அப்போதைய பண மதிப்பிற்கு நிகராக இப்போது கொடுக்க வேண்டும்

    3. இத்தனைக்கும் காரணமான புலிகள் உற்பட சகல தமிழ் இயக்கங்களையும் பாசிஸ தீவிரவாத இயக்கங்ககளாக அறிவிக்க வேண்டும்

    4. பிரபாகரனையும் அவனை சார்ந்தோரையும் ஜெர்மனி ஹிட்லரை அறிவித்தது போல தேசத்துரோகியாக அறிவிக்க வேண்டும்.

    5. வடகிழக்கு என்னும் சொல்பதத்தை தவிர்த்து பிரிவினை தூண்டும் ஈழம் போன்ற சொற்தொடர்கள் முற்றாக தடை செய்யப் பட வேண்டும்....!

    சம்மதமா.....?

    ReplyDelete
  6. காத்தான்குடி பள்ளிவாசல் சம்பவத்திற்கு முன்னர்.. கிழக்கில் தமிழ் மக்கள் மீது இஸ்லாமிய தீவிர மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் நடத்திய படுகொலையும்... தாரைப் படுகொலையும்.. அதில் சம்பந்தப்பட்ட இஸ்லாமிய தீவிர மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகள்.. அதே பள்ளிவாசலுக்குள் ஆயுதங்களோடு பதுங்கி இருந்ததும்.. அவர்களை சரணடையச் சொல்லி கோரப்பட்டதும்.. அவர்களை சரணடையச் செய்யாமல்.. பள்ளி நிர்வாகமும் சமூகமும் தமிழ் மக்கள் மீதான படுகொலைக்குத் துணை போனதும்.. இந்த வழக்குகளோடு சேர்த்து விசாரிக்கப்பட வேண்டும். எனவே தாரையில் இஸ்லாமிய தீவிர மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகளால் மற்றும் இவர்களினதும் சிங்கள அதிரடிப்படை மற்றும் இராணுவத்தின் கூட்டுப் படுகொலைகளுக்கும் இலக்கான தமிழ் மக்கள் சார்பிலும் வழக்குகள் பதிவு செய்யப்படுவதோடு சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்றங்களுக்கு அவை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    குறிப்பாக.. கல்முனைப்படுகொலைகள்.. 1990 இல் தமிழ் மக்கள் மீது மூதூரில் நிகழ்த்தப்பட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள்.. திருமலையில் நிகழ்த்தப்பட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள்.. தற்போது நிகழும் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் எல்லாம்.. நீதி விசாரணைக்கு உட்பட வேண்டும்.

    அதேபோல்... 1990 இல் வடக்கில் பள்ளிவாசல்களுக்குள் இனங்களுக்கிடையே மோதலை தூண்டும் வகையில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலும் நீதியான விசாரணைக்கு பள்ளிவாசல்களும் அப்போது பள்ளிவாசல் நிர்வாகங்களில் இருந்தோரும் தூய மனதோடு ஒத்துழைக்க முன்வர வேண்டும்.

    செய்வார்களா.. இந்த முஸ்லீம்கள்..?!

    ReplyDelete
  7. வரலாற்றை திரிக்க வேண்டாம் திரு. வரன், 90களுக்கு முதல் முஸ்லிம்களால் தமிழ் இனத்திற்கு எண்ட பாதிப்பும் ஏற்படவில்லை. குட்டக் குட்ட குனிய முடியாமல் தான் முஸ்லிம்கள் எதிர்தாக்குதல் நடத்தினார்கள். அத்துடன் முஸ்லிம்கள் ஆயுதம் வைத்திருந்தால் தமிழ் சமூகத்திற்கு எங்கே அரிக்குது. ஏன் ஆயுதம் வைத்திருப்பது தமிழர்களது ஏக போக உரிமையா?

    எனக்கு ஒன்றும் மட்டும் புரியவில்லை, எடுத்ததுக்கெல்லாம் கற்பழித்தார்கள் கற்பழித்தார்கள் என்று உங்கள் பெண்கள் மானத்தை ஏலம் விடுவது எதற்கு என்று புரியவில்லை. இலங்கையில் சகல இனமும் இந்த யுத்தத்தால் பாதிக்கப் பட்டார்கள். சகல கொடுமைகளும் அனுபவித்தார்கள். ஆனால் சிங்களவர்களும் சரி முஸ்லிம்களும் சரி தங்கள் இன பெண்களின் மானத்தை இப்படி ஏலம் விடுவதில்லை. சரி உங்க பெண்கள் அவர்கள் மானம் உங்க பிரச்சனை.

    இப்போ வடக்கு கிழக்கு இணைப்பு தேவை தமிழ் இனத்துக்குத்தான். அதுக்கு முஸ்லிம் சமுகம் சம்மதிக்க வேண்டும். சம்மதிக்க வேண்டும் என்றால் எங்கள் நிபந்தனைகள் நிறைவேற வேண்டும். மற்றப் படி முஸ்லிம்கள் அநியாயம் செய்தார்கள் என்று வரலாற்றை திரிக்க வேண்டும் என்றால் இருக்கும் ஆதாரங்ககளை கொண்டு விரும்பிய இடத்தில் முறையிட்டு நியாயம் பெற்றுக் கொள்ளலாம், அதில் முஸ்லிம் சமுகத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete

Powered by Blogger.