Header Ads



ரணிலுடனும், விஜயதாசவுடனும் எந்த கொடுக்கல் வாங்கலும் இல்லை - மகிந்த

தமக்கும் விஜயதாச ராஜபக்சவிற்கும் இடையில் எந்தவித கொடுக்கல் வாங்கல்களும் இல்லை என முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, விஜயதாச ராஜபக்ச, மகிந்த தரப்பினருடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டிருப்பதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையிலும் கொடுக்கல் வாங்கல் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது, எனினும் இரு குற்றச்சாட்டுக்களும் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.