Header Ads



விஜேதாசவை முழு, பௌத்தராக கருத முடியாது - ராவணா பலய

விஜேதாச ராஜபக்சவின் சிங்கள பௌத்தத்துவம் குறித்து பிரச்சினை இருப்பதாகவும், அவரை முழுமையான பௌத்தராக கருத முடியாது எனவும் ராவணா பலய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

நாராஹென்பிட்டிய அபயராம விகாரையில் இன்று -23- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

விஜேதாச ராஜபக்ச இதற்கு முன்னர் இலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல எனக் கூறியிருந்தார். சட்டமூலத்தை கொண்டு வந்து பௌத்த பிக்குகளை கட்டுப்படுத்த முயற்சித்தார்.

அந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருந்தால், தற்போது விஜேதாச ராஜபக்சவுக்கு ஆதரவாக எந்த பௌத்த பிக்கும் குரல் கொடுத்திருக்க மாட்டார்கள்.

சிங்கள பௌத்தத்தை முன்னிலைப்படுத்தி வரும் அரசியல்வாதிகளால் நாட்டு மக்கள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளதாகவும் சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.