Header Ads



ராஜினாமா செய் - ரவிக்கு ஜனாதிபதி உத்தரவு

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் ரவி கருணாநாயக்க, இனிமேலும் அமைச்சரவை அமைச்சுப் பதவியை தொடருவது அரசாங்கத்துக்கும் ரவி கருணாநாயக்கவுக்கும் பாரிய பிரச்சினை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், பதவி விலகுவதே சிறந்த தீர்வு என அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் ஜனாதிபதி குறிப்பிட்டதாக அரச உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ள

No comments

Powered by Blogger.