Header Ads



எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி, ஜனாதிபதியிடம் முறைப்பாடு - துமிந்த வராமைக்கு எதிர்ப்பு

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்லை நிர்­ண­யங்­களில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளது எனவும் முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை இல்­லாமற் செய்­வ­தற்கு திட்­டு­மிட்டு எல்­லைகள் நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் சம்­மே­ளனம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் முறைப்­பாடு செய்­ய­வுள்­ளது. 

இத் தீர்மானம்  கொழும்­பி­லுள்ள ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மை­ய­கத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உப தலை­வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் சம்­மே­ள­னத்தின் தலை­வரும் தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான ஏ.எச்.எம். பௌஸியின் தலை­மையில் நடை­பெற்ற கூட்­டத்தில் நிறை­வேற்­றப்­பட்­டது. 

நாட்டின் அனைத்துப் பிர­தே­சங்­க­ளி­லு­மி­ருந்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் முன்னாள் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பி­னர்கள் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். கூட்­டத்தில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் புதிய எல்­லைகள் நிர்­ணயம், புதிய தேர்தல் முறை­மை­பற்றி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் முஸ்லிம் சம்மேளன பிர­தி­நி­திகள் தமது எதிர்ப்­பு­களை வெளி­யிட்­டனர். கண்டிப் பகு­தி­யி­லி­ருந்து சமு­க­ம­ளித்­தி­ருந்த உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பிர­தி­நி­திகள் புதிய தேர்தல் முறைமை மற்றும் புதிய எல்­லைகள் நிர்­ணயம் பற்றி விமர்­சித்­தார்கள். முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை இல்­லாமற் செய்யும் வகையில் எல்­லைகள் வகுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பா­விடம் முறை­யிட்ட போது அவர் வழக்கு தாக்கல் செய்­யு­மாறு தெரி­வித்­துள்­ள­தா­கவும் முறை­யிட்­டனர். 

கடந்த காலங்­களில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் சார்பில் 125 பேர் பிர­நி­தி­தித்­துவம் பெற்­றி­ருந்­தனர். ஆனால் எதிர்­வரும் தேர்­தல்­களில் இந்த எண்­ணிக்கை 60 ஆக குறையும் வாய்ப்பு ஏற்­பட்­டுள்­ள­தாகத் தெரி­வித்­தனர். 

கூட்­டத்­துக்கு ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லாளர் அமைச்சர் துமிந்த திசா நாயக்­கா­வுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்தும் அவர் சமு­க­ம­ளிக்­கா­மைக்கு கூட்­டத்தில் பலத்த எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டது. உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் சு.க. முன்னாள் உறுப்­பி­னர்கள் கட்சியின் செய­லா­ள­ரிடம் கைய­ளிப்­ப­தற்கு மக­ஜர்கள் கொண்டு வந்த போதிலும் அவர் வருகை தரா­மையால் ஏமாற்­ற­ம­டைந்­தனர். 

கூட்­டத்­துக்கு தலை­மை­வ­கித்த இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி ஜனா­தி­ப­தி­யு­டா­னான சந்­திப்­புக்கு ஏற்­பாடு செய்­வ­தாக உறு­தி­ய­ளித்தார். இத­ன­டிப்­ப­டையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் சம்­மே­ள­னத்தின் பிர­தி­நி­திகள் சம்­மே­ள­னத்தின் தலைவர் அமைச்சர் பௌஸியின் தலை­மையில் விரைவில் ஜனா­தி­ப­தியைச் சந்­திக்­க­வுள்­ளனர். 

இதே­வேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் சம்­மே­ளனம் அனைத்து மாவட்­டங்­க­ளுக்கும் புதி­தாக அமைப்­பா­ளர்­களை நிய­மிக்­க­வுள்­ளது. அதன்­பின்பு, கொழும்பில் மாநாடு ஒன்­றி­னையும் நடத்தவுள்ளது. 

நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் காதர், வடமாகாண அளுநர் ரெஜினோல்ட் குரே, முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். 

-Fareel-

1 comment:

  1. Muslims in Sri Lanka do NOT have a voice - a POLITICAL VOICE for that purpose. The SLMC is dead. The ACMC is busy making money, the Muslim politicians stooging the UNP are ONLY interested in their personal benefits. The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa are now stooging the Yahapalana government and enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The Muslim Civil Society in Sri Lanka and their leaders will stage dramas by releasing "press statements" because all of them have been well taken care by the Yahapalana government as did the Mahinda government do and the foreign interests who are giving them large amounts of funding to keep their mouth shut. The media will play their role to misguide the sincere and "appaavi Muslimgal". Like what happened in Aluthgama and Beruwela, Maharagama and Dambulla, they all will COVER up the TRUTH and the Muslims will be told a "LONG STORY. A few Muslim media like Jaffanamuslim.com have NOT failed to report unbaisely. WHAT EVER PARTY MUSLIMS MAY CONTEST, IT IS CLEAR THAT FAIZER MUSTHAPA HAS MADE OUR REPRESENTATION ABILITY TO BE REDUCED FROM 125 TO 60. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.

    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete

Powered by Blogger.