விஜயதாஸவுக்கு சுயகௌரவம் இருந்தால், உடனடியாகப் பதவி விலகவேண்டும் - பொன்சேகா
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவுக்கு சுயகௌரவம் இருக்குமேயானால் அவர் உடனடியாகப் பதவி விலகவேண்டுமென பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
விஜயதாஸ ராஜபக்ஸ ஊழல்வாதிகளையும், மோசடியாளர்களையும் காப்பாற்றிவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
குற்றம் செய்தவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவருவதற்குத் தடையாக இருக்கின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியினரின் ஒட்டுமொத்த வெறுப்புக்கும் ஆளாகியிருக்கின்றார். அவர் இந்தப் பதவியைவிட்டு விலகினால் மட்டுமே குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, அவருக்கு சுயகௌரவம் இருக்குமேயானால் தனது பதவியை உடனடியாக இராஜினாமா செய்யவேண்டு என்றும் அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
Post a Comment