Header Ads



பரீட்சை நிலையத்திலிருந்து உபகரணம் மூலம், கேள்விகளை வெளியில் அனுப்பிய மாணவன் கைது

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவனொருவன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2017 இன் இரசாயனவியல் விஞ்ஞான பாட வினாக்கள் கடந்த சனிக்கிழமை கையேடு வடிவில் வெளியாகியாகியிருந்தன.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வினாத்தாள்களை அச்சிடுவதற்கு கைதுசெய்யப்பட்ட மாணவன் பரீட்சை நிலையத்தில் இருந்து இலத்திரனியல் தொழில்நுட்ப உபகரணம் மூலம் கேள்விகளை வெளியில் அனுப்பிய சந்தேகத்தின் அடிப்டையில் குறித்த மாணவன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.