Header Ads



பதவி விலகமாட்டேன், ஜனாதிபதி தீர்மானிக்கட்டும் - விஜேதாச

நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் பதவியில் இருந்து தாம் விலகப் போவதில்லை என்று விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.

‘பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக என் மீது சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அதனால், அமைச்சர் பதவியில் இருந்துவிலகும் எண்ணம் எனக்கு இல்லை.

எனக்கு எதிரான எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் பதில் அளிப்பேன்.

நான் தபிவ விலகுவதாக அறிவிக்கப் போவதில்லை. அதனைச் செய்யவும் மாட்டேன். ஜனாதிபதி முடிவெடுக்கட்டும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

விஜேதாச ராஜபக்ச இன்று தனது பதவி விலகல் அறிவிப்பை வெளியிடுவார் என்று நேற்று செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.