விஜயதாசவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தொகுதி உறுப்பினர்களினால் விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் விஜயதாசவிற்கு எதிராக கொண்டு வர உத்தேசிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லா தீர்மான யோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதா இல்லையா என்பது குறித்து ஆராயப்பட்டு அதன் பின்னர் தீர்மானிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
அது வரையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் யோசனையை ஒத்தி வைக்குமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொழும்பு நாளிதழ் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment